Showing posts with label health tips. Show all posts
Showing posts with label health tips. Show all posts

Friday, January 3, 2014

சர்க்கரை நோயை தீர்க்க எளிய வழி

சர்க்கரை நோயை தீர்க்க எளிய வழி 










சிறியா நங்கை இலைகளை பொடி செய்து தினமும் இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்..

Sunday, November 6, 2011

பெண்களை காதலிப்பது எப்படி?


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..


2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

Thursday, March 3, 2011

உடல்நலம் பேணுதல் குறித்த ஒரு சிறுகுறிப்பு


நமது நல்ல ஆரோக்கியமான உடல் நலனுக்கு கனிகள் மிகவும் அவசியம். பழச்சாறுகள் 100 விழுக்காடு வரை நமக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தருகின்றன.


பச்சைக் கனிகளில் மினரல்கள் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ளது. இது உடல் குருதி ஓட்டத்திற்கு மிகவும் நல்லது.

சிவப்பு கனிகள் உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறு காத்து நிற்கிறது. தக்காளி, தர்பூசிணி மற்றும் strawberry போன்றவை இதில் அடங்கும்.

மஞ்சள் நிறக் கனிகள் கண்புரை வராது காத்து நிற்கிறது. மஞ்சச் சோளம், அன்னாசி மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் இதில் அடங்கும்.

பழச் சாறுகளின் சில பழங்கள்:

ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் புற்று நோய் வருவதை தடுத்துக் கொள்ளலாம்.

காரட், சர்க்கரை வள்ளி போன்றவை கண்களுக்கும் நல்லது. இதில் வைட்டமின் ஏ நிறைய உண்டு.
வெள்ளை மற்றும் பச்சை நிறக் கனிகளில் தாதுச் சத்துக்கள் நிறைய உண்டு. வெங்காயம் மற்றும் பூண்டு இதில் அடங்கும்.

பாக்டீரியா மற்றும் காளான் தீங்கு இல்லாமல் இது நம்மைக் காக்கும் சிவப்பு மற்றும் நீல நிற கனிகள் ரத்த ஓட்டம் மற்றும் இருதயத்திற்கு மிக்க நல்லது. ஆப்பிள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

Wednesday, March 2, 2011

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி



ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.


சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.

பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.

பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.

ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு!

பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.

வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?

சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.

கவனத்தில் வையுங்கள்:

சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.

பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?

நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?

Axe

பெண்களின் ஃபேவரைட்?

ஜோவன் வொய்ட் மஸ்க்

மேக்ஸி - ப்ளூ லேடி

விக்கல் ஏன் ஏற்படுகிறது


மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புக் கூடு விரிய வேண்டும். இதற்கு துணை புரிய வெளிய மார்புத் தசைகள் சுருங்க, உதரவிதானம் சுருங்கி கீழிறங்க நுரையீரல்கள் இரண்டும் விரியும்.


அப்போது நுரையீரல்களில் காற்றின் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்று குரல் நாண்களை நன்றாகத் திறந்துகொண்டு மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களுக்கும் நுழையும். இது இயல்பாக நிகழும் நிகழ்வு.

சில சயமங்களில் மார்புத் தசைகள் போதுமான அளவிற்கு சுருங்காது. உதரவிதானம் சரியாக கீழிறங்காது. குரல் நாண்கள் நன்றாகத் திறக்காது. இம்மாதிரி சமயங்களில் மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழை வேண்டும். அப்போது ஒருவித விநோத ஒலி உண்டாகும். அதுதான் விக்கல்.

சாதாரணமாக நாம் அளவிற்கு மீறி அல்லது அவசரமாக உணவு உட்கொண்டால் விக்கல் வரும். தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

அதேசமயம், சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Tuesday, March 1, 2011

கூந்தல் அதிகம் உதிர்வதை தடுக்க


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.


கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.

புற்று நோய்க்கு மனிதனே காரணம்


புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.

பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

Saturday, February 26, 2011

மாதுளத்தின் மருத்துவக்குணம்


மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.


பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து உள்ளது. புரதச்சத்து , நார்ச்சத்து விழுக்காடும், கார்போ ஹைட்ரேட், தாதுக்கள் சுண்ணாம்புச் சத்து மக்னீஷியம் அடங்கியுள்ளன.

மேலும், விற்றமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.

மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.

மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

Wednesday, February 23, 2011

முக அழகுக்கு மெருகூட்டும் உதடுகள்


முக அழகுக்கு பெருகூட்டுவது உதடுகள் என்றால் அது மிகையாகாது. உதட்டில் 'லிப்ஸ்டிக்' தடவிக் கொண்டால் மட்டும் போதாது. மென்மையாகப் பராமரிக்கவும் வேண்டும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறவும் செய்யும்.


மற்றவர்கள் உபயோகிக்கும் 'லிப்ஸ்டிக்'கைப் பயன்படுத்துவது கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி 'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமானதைத் தெரிவு செய்யுங்கள். 'லிப்ஸ்டிக்' போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள 'லிப்ஸ்டிக்'கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக மிக முக்கியம். 'லிப்ஸ்டிக்'கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. 'லிப் பிரஷ்'ஷின் உதவியாலேயே 'லிப்ஸ்டிக்' போட வேண்டும் முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு 1 தேக்கரண்டி பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும். 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெயுடன் சிறிதளவு தேன், பன்னீர் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். உதடுகளில் தடவிய 'லிப்ஸ்டிக்'கை நீக்க தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம். 'லிப்ஸ்டிக்' போடுவதற்கு முன் உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், 'லிப்ஸ்டிக்' நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் வறண்டு காணப்படும். உதடுகளுக்கு 'மேக்அப்' போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு 'லிப்ஸ்டிக்' தடவினால் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

'லிப்ஸ்டிக்' உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் 'லிப் சால்வ்' உபயோகிக்கலாம். 'லிப்ஸ்டிக்' உபயோகிக்காமல் நேரடியாக 'லிப் கிளாஸ்' தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். 'லிப்ஸ்டிக்'கின் மேல் தான் 'லிப் கிளாஸ்' தடவப்பட வேண்டும்.

நீண்ட நேரம் அப்படியே இருக்க 'லிப் பேஸ்' தடவி விட்டு அதன் மேல் 'லிப்ஸ்டிக்' தடவ வேண்டும். 'லிப்ஸ்டிக்' போடும் போது அதன் நிறத்திற்கு ஏற்றதாக 'லிப் லைனரி'ன் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். சிவப்பு நிறத்தைச் சார்ந்த 'லிப்ஸ்டிக்'குகளுக்கு சிவப்பு நிற 'லிப் லைனரு'ம் உபயோகிக்கலாம். தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காகப் பயன்படுத்தலாம்.

'மாய்ஸ்சுரைசர்' இல்லாத 'லிப்லைனரை' 'லிப்ஸ்டிக்'காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு 'க்ரீம்' தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

Monday, February 21, 2011

உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்


தினந்தோறும், நம்முடைய உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் குறைவின்றிப் பெறுவதற்கான பத்து கட்டளைகள்:


1. உணவு பிரமிடை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள விகித்தின்படி சாப்பிட்டால், உடம்புக்கும் நல்லது, தேவையன வைட்டமின்களும் முழுமையாக கிடைக்கும்.

2. பொரும்பாலான வைட்டமின்கள், சமைக்கும்போது (அதிக சூட்டில்) அழிந்துவிடுகின்றன. ஆகவே, பச்சைக் காய்கறிகள், அரைவேக்காட்டில் சமைத்த உணவு வகைகளைச் சாப்பிடுவதில் நன்மை அதிகம்.

3. சமைத்த உணவானாலும்கூட, அதை உடனடியாக & 'ஃப்ரெஷ்' ஷாக உட்கொள்வது நல்லது.

4. காபி, டீ, ரசாயன குளிர்பானங்களைத் தவிர்ப்பது நலம். இந்த பானங்களில் வைட்டமின்கம் இல்லை. போதாக்குறைக்கு, இவற்றில் உள்ள காஃபின்,மற்ற உணவுப் பொருள்களில் உள்ள வைட்டமின்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனை பாதிக்கிறது. இவற்றுக்கு பதில், இயற்கையான பழரசங்களைக் குடிக்கலாம்.

5. புகைப்பழக்கம், குடிப்பழக்கம், அநேகமாக எல்லாம் வைட்டமின்களுக்கும் எதிரி.

6. காலை உணவில், கார்ன் ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸ் போன்றவற்றைச் சேர்ந்துக் கொள்வதன்மூலம், பல வைட்டமின்கள், தாதுப் பொருள்களைப் பெற முடியும். அவற்றில் தானியங்களும் கலந்திருந்தால் இன்னும் நல்லது.

7. மதியம், இரவு உணவில் குறைந்தபட்சம் இரண்டு காய்கறிகள் இருக்கவேண்டும்.

8. உணவுடன், அல்லது நொறுக்குத் தீனி நேரத்தில் நிறைய சால்ட் சாப்பிடுங்கள் (வெள்ளரி, தக்காளி, காரட், லெட்யூஸ்)

9. உணவு பலனளிக்காதபோது மட்டும்தான் வைட்டமின் மாத்திரைகளைத் தேடிப் போகலாம்.

10. அளவுக்கு அதிகமானால், வைட்டமினும் விஷம்தான். தினசரி எந்த வைட்டமினை அதிகபட்சம் எவ்வளவு உட்கொள்ளலாம் என்கிற கணக்கை எப்போதும் மறந்துவிட வேண்டாம்.

இய‌ற்கை வைத்தியம்


பித்த‌ப் ‌பிர‌ச்சனைக‌ள் ‌தீர எ‌ளிய வ‌ழிக‌ள்:

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.


மழைக்கால‌ப் பராம‌ரி‌ப்பு அ‌வ‌சிய‌ம்:

மழைக்காலம் தொடங்கி விட்டது. கட‌ந்த ஒரு ‌சில வார‌ங்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. மழை‌யி‌ல் நமது உடலை ‌மிகவு‌ம் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். மழை‌க் கால‌த்‌தி‌ல் எ‌ளிதாக நோ‌ய்‌க‌ள் தா‌க்கு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது. எனவே, ஒ‌வ்வொரு செயலையு‌ம் ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம். க‌ண்ட இட‌த்‌திலு‌ம் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌க் கூடாது. அடி‌க்கடி தலை‌க்கு கு‌ளி‌க்காம‌ல் இரு‌ப்பது‌ம் ந‌ல்லது. கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தட‌வி ‌பிறகு கு‌ளி‌க்கலா‌ம். கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌‌ர் ‌அ‌ல்லாம‌ல் வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கலா‌ம். கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ஒரு கை‌ப்‌பிடி வே‌ப்‌பிலை போ‌ட்டு கு‌ளி‌த்தா‌ல் ‌கிரு‌‌மிக‌ள் ஒ‌‌ழியு‌ம். பெ‌ண்க‌ள் ம‌ஞ்ச‌ள் தே‌ய்‌த்து கு‌ளி‌க்கலா‌ம். ம‌ஞ்ச‌ள் ந‌ல்ல ‌கிரு‌மி நா‌சி‌னியாக செய‌ல்படு‌ம். மழை‌யி‌ல் நனை‌ந்து ஈரமான து‌ணியுட‌ன் இரு‌ந்தா‌ல் உடலு‌க்கு கெடுதலை‌ப் பய‌‌க்கு‌ம். உடனடியாக ஈர‌த் து‌ணியை மா‌ற்‌றி‌வி‌ட்டு, கை, கா‌ல் பகு‌திக‌ளி‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து கழு‌வி ‌விடலா‌ம்.

வே‌ர்‌‌க்கடலை‌யி‌ன் மக‌த்துவ‌ம்:

உய‌ர்‌ந்த புரத ச‌த்து ‌நிறை‌ந்த உண‌வி‌ல் சோயா ‌பீ‌ன்‌சி‌‌ற்கு அடு‌த்தபடியாக வே‌ர்‌க்கடலை இட‌ம்பெறு‌ம். அ‌தி‌ல்லாம‌ல், பா‌ஸ்பர‌ஸ், கால‌்‌சி‌ம், இரு‌ம்பு‌ச்ச‌த்து, வை‌ட்ட‌மி‌ன் ஈ, ‌நியா‌‌ஸி‌ன் போ‌ன்ற வை‌ட்ட‌மி‌ன்களு‌ம் அ‌திக‌ப்படியாக வே‌ர்‌க்கடலை‌யி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே‌ர்‌க்கடலை‌க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. வ‌யி‌‌ற்‌றி‌ல் பிரச்சினை உள்ளவர்கள், உட‌ல் எடையை‌க் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலா‌ம். வே‌ர்‌க்கடலை சா‌ப்‌‌பி‌ட்டது‌ம், ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்காத கா‌பி அ‌ல்லது டீ அரு‌ந்தவு‌ம். ப‌சி‌த்த ‌பிறகு சா‌ப்‌பிட‌ச் செ‌ன்றா‌ல் குறைவான அளவே சா‌ப்‌பிட முடியு‌ம். இதனா‌ல் உட‌ல் எடை குறையு‌ம். வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்:

பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம். வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்:

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது. உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.